மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 21 May 2022

சாப்பிட்டவுடன் டீ குடிப்பவரா? இதை படியுங்கள் ...


        தேநீர் தயாரிக்கும் விதத்தில் அதன் நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. தேநீர் சுவை கிராம்பு, இஞ்சி, துளசி இலைகள், தேயிலை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து பருகுவது ஒரு பாரம்பரிய தேநீரின் சுவையை கொடுக்கும். இதுவே சிறந்த தேநீர் தயாரிக்கும் சரியான வழிமுறையுமாகும்.



    செரிமான மண்டலத்தின் சிறப்பான செயலாற்றல், சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை போக்க உதவுவது போன்றவற்றில் ஒரு சிறந்த தேநீர் சிறப்பாக செயல் புரிகிறது.


     தேநீர் தயாரிப்பு ஆனால் கடந்த சில காலமாக, இந்த தேநீர் தயாரிப்பு முறையில் மாற்றம் உண்டாக்கி அதில் சுவையை அதிகரிக்க பால் சேர்த்து பருகி வருகின்றனர். இதனால் இதன் சுவை உலகமெங்கும் பரவி தேநீர் பிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. முன்னர் கூறிய தயாரிப்பு முறை ஒரு மருத்துவ கலவையாக இருந்த நேரத்தில், பால் சேர்த்து தயாரிக்கும் இந்த முறை ஒரு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.


      ஒரு கப் தேநீர், பதட்டத்தைப் போக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.


        உணவு வழிகாட்டி குழுவின் அமைப்பாளரான டாக்டர் டி. ரகுநாத் ராவ், தேநீர் மற்றும் காபி ஆகியவற்றை குறைந்த பட்சம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னும் பின்னும் பருகுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். தேநீர் மற்றும் காபியில் உள்ள டானின் என்னும் ரசாயனம், இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கிறது.


    குறிப்பாக டீயில் பால் சேர்க்கப்படுவதால், சாப்பிட்ட பின் நன்மையை விட அதிக தீங்கை உண்டாக்குகிறது. குறிப்பாக செரிமானத்தில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் மிதமான அளவிற்கு மேல் இவற்றைப் பருகுவதால் உங்கள் குடல் பகுதியில் செயல்பாடுகளை தடை செய்து, தீவிர அசிடிட்டி மற்றும் வீக்கத்தை உண்டாக்குகிறது.


    இதனால் பெருங்குடல் மற்றும் செரிமான பாதையின் ஆரோக்கியம் பாதிக்கிறது. ஆகவே தேநீர் பிரியர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் தேநீர் பருகுவதை நிறுத்திக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

தேநீர் தினத்தில் பலவித தேநீர்களை சுவையுங்கள்...

Pages