மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 10 March 2019

வரலாற்றில் இன்று __ மார்ச் 10


1801 - பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. 

1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். 


1902 - அசையும் படப்பிடி கருவியை தாமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

1902 - துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது. 

1906 - வடக்கு பிரான்சில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 

1922 - கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். 

1933 - கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டனர். 

1957 - அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன் பிறந்த தினம். 

1977 - யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர். 

1982 - கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

Pages