மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 4 March 2019

பேனா எழுதாவிட்டால் இப்படி செய்யுங்கள்



           பந்துமுனை பேனாக்கள் (பால்பாயின்ட்) திடீரென எழுத மறுப்பதை பல வேளைகளில் கவனிக்கலாம். உள்ளே மை இருந்தும் எழுத மறுத்தால், ஒருவேளை நீண்ட இடைவேளைக்குப் பின் பயன்படுத்துவதால் உள்ளே இருக்கும் மை கெட்டிப்பட்டுப் போயிருப்பது காரணமாக இருக்கும். அல்லது காற்று இடைவெளி ஏற்பட்டிருக்கலாம். மெழுகுதிரியின் வெப்பத்தின் அருகிலோ அல்லது இஸ்திரி பெட்டியின் குறைந்த வெப்பத்தில் ஒரு காகிதத்தின் அடியில் பேனாவை வைத்தோ லேசாக சூடுபடுத்தினால் இந்த கெட்டிப்பட்ட மை உருகி எழுத ஆரம்பித்துவிடும்.




Pages