மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 23 March 2019

நேருவின் நகைச்சுவை


       ஒரு சமயம் அமெரிக்காவுக்குச் சென்றார் நேரு. அங்கு வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு ஒரு வகுப்பறையில் மாணவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். 


     அப்போது அங்கிருந்த மாணவர்கள் நேருவிடம், "எங்கள் பள்ளியில் ஒரு மாணவன் இருக்கிறான்.... அவன் சிரிக்கவே மாட்டான்! யார் என்ன ஜோக் சொன்னாலும் அவன் முகத்தில் சிரிப்பே வராது!... உங்களால் அவனைச் சிரிக்க வைக்க முடியுமா?...'' என்று கேட்டனர்.

    நேருவுக்கு அந்த மாணவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது!... அவனை எப்படியாவது சிரிக்க வைத்து விட வேண்டும் என்று எண்ணினார். அந்த மாணவன் இருந்த வகுப்பறைக்குச் சென்றார். அவனோ முகத்தை "உம்' என்று வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்!

    நேரு யோசித்தார். அவரது பாக்கெட்டிலிருந்து ஒரு சீப்பை எடுத்தார். எடுத்து தனது வழுக்கைத் தலையைச் சீவினார். உடனே அந்த மாணவன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்!... அந்த மாணவன் மட்டும் அல்ல.... அங்கிருந்த அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்!

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..!
குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்துங்கள்.
அவர்களிடம் நிறைய மனம் திறந்து பேசுங்கள்..

Pages