மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 14 March 2019

மரங்கள் பற்றிய பழமொழிகள்


  1  மரங்களை நடுபவன் பிறரை நேசிக்கிறான். தன்னையும் நேசிக்கிறான். - ஸ்காட்லாந்து.
    

2  தன்னை வீழ்த்துகிற கோடாரியிலும் சந்தன மரத்தின் வாசனை மணக்கிறது - இங்கிலாந்து.

3  பாலைவனத்திலிருப்பவன் மரங்களைத்தான் தேடுகிறான் - இந்தியா.

 4  மரத்தை ஒருவன் வெட்டிக்கொண்டிருக்கிறான்!... அவனுக்கு அவன் காரியம் முடியும் வரை அந்த மரமே நிழல் தந்துகொண்டிருக்கிறது! - சீனா.

5   கற்களை எறிந்தாலும் கனி தரும் மரம்! - ஸ்வீடன்.

6   குப்பை கூளங்களில் முளைத்தாலும் மரங்களின் கனிகள் சுவையாகத்தான் இருக்கும்! - மாவேரி.

7    நிழல் தரும் மரத்தை வெட்டுவதும், உதவி செய்பவனைக் கெடுப்பதும் ஒன்றுதான் - ஹங்கேரி.

8 தரையில் இறங்குவதைவிட பறவைகள் மரங்களின் கிளைகளில் அமர்வது கண்கொள்ளாக் காட்சியாகும். - இந்தியா.


10 வீடுகளில் தொங்கும் ஊஞ்சல்களைவிட விழுதுகளால் பின்னிய ஊஞ்சல்களையே சிறுவர்கள் விரும்புவர்! - இந்தியா.

Pages