மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 6 April 2019

விடைக் கிடைக்காத மர்மம்...நாஸ்கா கோடுகள் !!


     பல்வேறு அதிசயங்களையும், மர்மங்களையும், மனித அறிவுக்கு புலப்படாத பல ரகசியங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த பூமி.


      அவ்வாறு அதிசயம் நிறைந்த இடத்தில் ஒன்றுதான் அமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டிலுள்ள நாஸ்கா கோடுகள். இது நாஸ்கா பாலைவன நிலத்தில் செதுக்கப்பட்டுள்ள வடிவியல் உருவங்கள் ஆகும்.

   நடுவானில் பறந்து கொண்டிருக்கும்பொழுது மரங்களோ, கட்டிடங்களோ ஒரே சீராக இருப்பதை பார்த்தாலே நம் மனதிற்குள் ஒரு சிறு மகிழ்ச்சி உருவாகிவிடும்.

      மனிதன், மிருகம், தாவரம் என பல உருவங்களில் சுமார் 900 வடிவியல் உருவங்கள் அப்பாலைவன நிலப்பகுதியில் காணப்படுகிறது.

   எந்தவித தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத அக்காலத்தில் நேர்க்கோட்டில் மிகப் பிரம்மாண்டமான கோடுகளை வடிவமைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகத்தான் கருதப்படுகிறது.
     அருகில் இருந்து பார்த்தால், நீண்ட பாதை போல மட்டுமே காட்சியளிக்கும் இந்த கோடுகளை வானத்தில் இருந்து பார்த்தால் மிக பிரம்மாண்டமான பறவைகள் போன்றோ, குரங்கு போன்றோ, சிலந்தி போன்றோ காட்சியளிக்கிறது.

    எதனால் இதுபோன்ற கோடுகள் உருவாக்கப்பட்டன? அந்த காலத்திலேயே எப்படி இதுபோன்ற நேர்க்கோடுகளை வடிவமைப்பது சாத்தியம் என்பது போன்ற பல்வேறு மர்மங்களும், தேடுதல்களும் இந்த நாஸ்கா கோடுகளின் பின்னால் இருந்த வண்ணம் இருக்கிறது. 

     வெள்ளம், சூறாவளி என பல இயற்கை பேரிடர்கள் வந்தபொழுதும், சுமார் 2000 ஆண்டுகள் இந்த கோடுகள் நிலைத்திருப்பது மிக ஆச்சரியமான ஒன்று.

     எந்த ஒரு தொழில்நுட்பமும், உயரத்தில் இருந்து பார்க்கக்கூடிய வசதிகள் இல்லாத காலத்தில் எப்படி வரையப்பட்டிருக்கும் என்பதுதான் வியப்பின் உச்சம்.

குரங்கு வடிவம் :

      இரண்டு கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிற்கு உள்ள இடத்தில் ஒரு குரங்கு வரையப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் ஆரம்பிக்கும் கோடு சிறிய காதுகள், தலை, கால்கள், அளவான உடல், ஆறேழு சுற்று சுற்றிய வால் என சீராக வரையப்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது. 


      பாடப்புத்தகத்தில் ஒரு ஓவியத்தை சீராக வரையவே நாம் சிரமப்படும் வேளையில், எப்படி பிரம்மாண்டமான கோடுகளைத் தீட்ட முடிந்தது? இந்தக் குரங்கின் முழு உருவத்தைப் பார்க்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு கிலோமீட்டர் உயரத்திற்குச் செல்ல வேண்டும். 


      வியக்கத்தக்க வண்ணம் வானில் இருந்து பார்க்கும்போது நேரான நீண்ட நாஸ்கா கோடுகள் தற்கால விமான ஓடுபாதையை தெளிவாக பிரதிபலிக்கின்றன.


     இந்த மாபெரும் புள்ளிவிவரங்கள் மேலே இருந்து பார்க்கும் போது என்ன பொருள்களை வழங்கும்..? வானத்தில் உள்ள நட்சத்திர கட்டமைப்புகளை தான் இவைகள் நிஜத்தில் பிரதிபலிக்கிறதா..? இந்த பண்டைய முயற்சி எதிர்கால தலைமுறையினருக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறது..? அல்லது நாஸ்கா கோடுகள் வெறுமனே ஒரு பழங்கால கலை தானா..? என்ற கேள்வி அனைவருக்குள்ளும் உள்ளது.

   நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தீர்வை வெளியிட்டாலும், நாஸ்காவின் மர்மம் மட்டும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

Pages