மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 15 July 2021

மாணவர்களுக்கு தமிழ் விடுகதைகள்



1.  அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது – அது என்ன? 
      தண்ணீர்.

2. அண்டை வீட்டில் குடியிருப்போம் அக்காள் தங்கை நாங்கள்; கிட்டகிட்ட இருந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டோம் – அது என்ன?
     கண்கள்.

3. அம்பலத்தில் ஆடுகிற அழகுப் பொண்ணுக்கு அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி – அது என்ன? 
      மயில்.

4. அம்மா சும்மா படுத்திருப்பாள் மகள் முன்னும் பின்னும் – அது என்ன? 
     அம்மியும் குழவியும்.

5. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது – அது என்ன? 
     காற்று.

6. ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை – அது என்ன?
      மூக்கு

7. ஆள் இறங்காத கிணற்றிலே மரம் இறங்கிக் கூத்தாடுது – அது என்ன?
   தயிர் கடையும் மத்து.

8. உச்சிக் கிளையிலே ஒரு முழக் குச்சி ஊசலாடுது – அது என்ன? 
     முருங்கைக்காய்.

9. உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டி – அது என்ன? 
    வானம்.

10. உள்ளே இருந்தால் ஓடித் திரிவான்; வெளியில் வந்தால் விரைவில் மடிவான் – அது என்ன? 
      மீன்

11. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம் எவராலும் பார்க்க இயலாத கடிகாரம் – அது என்ன? 
     இதயம்.

12. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை – அது என்ன? 
       பூமி.

13. ஒரு குருவிக்கு ஒரே கால்; நாலு இறக்கை – அது என்ன? 
       அரைக்கீரை.


14. ஒல்லியான மனிதனுக்கு ஒரே காது – அது என்ன? 
      ஊசி.

15.  ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி – அது என்ன? 
        பூண்டு .

16. ஓட்டுத் திண்ணையில் பட்டுப் புடவை – அது என்ன? 
      மூக்குத்தி.

17. கண் இல்லாத நான், பார்வையிழந்தவர்க்குப் பாதை கேட்டேன் – 
       அது என்ன? 
       கைத்தடி.

18. கண் சிமிட்டும் ஒன்று; மணி அடிக்கும் மற்றொன்று; கண்ணீர் வடிக்கும் இன்னொன்று – அது என்ன? 
      மின்னல், இடி, மழை

19.  கத்திபோல் இலை இருக்கும் கவரிமான் பூப்பூக்கும், தின்னப்பழம் பழுக்கும், தின்னாத காய் காய்க்கும் – அது என்ன? 
      வேப்பமரம்

20. கள்ளனுக்குக் காவல் காற்றுக்குத் தோழன் – அது என்ன? 
      ஜன்னல்

21. காசியிலிருந்து கல்கத்தாவரை ஆடாமல் அசையாமல் போகிறது – அது என்ன? 
      தண்டவாளம்.

22. காது பெரிசு; கேளாது – அது என்ன? 
      அண்டா

23. காலில்லாத பந்தல் காணக் காண விநோதம் – அது என்ன? 
      வானம்.

24. காலையில் நான்கு கால்; கடும்பகலில் இரண்டு கால்; மாலையில் மூன்று கால்; முடிவிலே எட்டுக்கால் – அது என்ன? 
    தவழும் குழந்தை , நடக்கும் இளைஞன், தடியுடன் கிழவர்.தூக்கிச் செல்லும் நால்வர்.


25. கிணற்றைச் சுற்றி வெள்ளைக் கல் – அது என்ன?
      பல்.

26. கையிலே கர்ணம் போடும் கணக்குப் பிள்ளை யார்? 
        நாற்காலி.

27. கையிலே கர்ணம் போடும் கணக்குப் பிள்ளை யார்? – அது என்ன? 
       அளக்கும் படி.

28. கொக்கு நிற்க நிற்க; குளம் வற்ற வற்ற – அது என்ன? 
      எண்ணெய் விளக்கு

29. சிறுசிறு கதவுகள்: செய்யாத கதவுகள் திறக்க அடைக்க சத்தம் செய்யாக் கதவுகள் – அது என்ன? 
        கண் இமைகள்

30. சின்ன மச்சான் – என்னைக் குனிய வச்சான் – அது என்ன? 
     முள்.

31. சின்னப் பையனும் சின்னப் பெண்ணும் சேர்ந்து கட்டின மாலை அதை சிக்கில்லாமல் அவிழ்ப்பவர்க்குச் சென்னைப் பட்டினம் பாதி – அது என்ன? 
      தூக்கணாங் குருவிக் கூடு.

32. சூடுபட்டு சிவந்தவன் வீடுகட்ட உதவுவான் – அது என்ன? 
       செங்கல்.

33. தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணீர் குடித்தால் மடியும் – அது என்ன?
       நெருப்பு.

34. நித்தம் கொட்டும்; சத்தம் இல்லை – அது என்ன? 
        கண் இமை

35. நிலத்திலே முளைக்காத புல்-அது நிமிர்ந்து நிற்காத புல் – அது என்ன? 
        தலைமயிர்.

36. நூல் நூற்கும்; இராட்டை அல்ல ஆடை நெய்யும்; தறியும் அல்ல – அது என்ன? 
        சிலந்தி.

37. பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்க முடியவில்லை – அது என்ன?
        முதுகு.

38. பட்டையைப் பட்டையை நீக்கி, பதினாறு பட்டையை நீக்கி, முத்துப் பட்டையை நீக்கி, முன்னே வாராள் சீமாட்டி – அது என்ன? 
      வாழைப்பூ

39. பார்த்தால் கல்தான்; பல்பட்டால் தண்ணீர் தான் – அது என்ன? 
      பனிக்கட்டி.

40.  பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுத் தோட்டம் – அது என்ன? 
        வானம்.

41. மஞ்சள் சட்டை மாப்பிள்ளை மண மணக்கிறார் வீட்டிலே – அது என்ன? 
       எலுமிச்சம்பழம்.

42. மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி, உரிக்க உரிக்கத் தோலாண்டி – அது என்ன? 
       வெங்காயம்.

43. முகத்திலே காட்டுவான்; முதுகிலே காட்டமாட்டான் – அது என்ன? 
       முகம் பார்க்கும் கண்ணாடி

44. முதுகெல்லாம் கூனல்; வயிறெல்லாம் பல், முள்ளு வேலியும் தாண்டி, மூங்கில் வேலியும் தாண்டி, உள்ளே சென்று பார்த்தால் ஒளிந்திருப்பான் சின்னப்பயல் – அது என்ன? 
        கருக்கரிவாள்.

45. முன்னும் பின்னும் போவான் – ஆனால், ஒற்றைக் காலில் நிற்பான் – அது என்ன?
         கதவு.

46. வட்ட வட்டப் பாய்; வாழ்வு தரும் பாய்; ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய் – அது என்ன? 
        ரூபாய்.

47. வண்ணான் வெளுக்காத வெள்ளை, குயவன் பண்ணாத பாண்டம், மழை பெய்யாத தண்ணீர் – அது என்ன? 
       தேங்காய்.

48. வாலைப் பிடித்தால் வாயைப் பிளப்பான்; நெருப்பை விழுங்குவான்; விழுங்கிக் கக்குவான் – அது என்ன? 
       குறடு

49. வெள்ளைக் குதிரையும் கறுப்புக் குதிரையும் மாறி மாறி ஓடும்; பிடிக்க முடியாது – அது என்ன? 
       பகலும் இரவும்.


Pages