மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 23 August 2021

வெண்ணை திருடன் கண்ணன்...

 


         ஆளுக்கொரு குரல் எழுப்பி கூப்பிட்டார்கள். யசோதா வெளியில் வந்தவள், இத்தனை பெரிய கூட்டத்தை பார்த்து திடுக்கிட்டாள். "என்னடி இது? அத்தனை பேரும் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கிறீர்கள். அது மட்டுமல்லாமல் எல்லோரும் ஒரு கையை ஒரு பக்கமாக நீட்டிக் கொண்டே வேறு இருக்கிறீர்கள்? எல்லோருக்கும் ஒரே சமயத்தில் கை சுளுக்கிக் கொண்டு விட்டதா?, " முகவாயில் கை வைத்துக்கொண்டு ஆச்சரியமாகக் கேட்டாள்.


       அவளுக்கும் அவர்கள் எல்லாரும் பிடித்து இருந்ததாக நினைத்த கிருஷ்ணர்கள் தெரியவில்லை. "யசோதா! உன்பிள்ளை எங்கள் வீடுகளில் வெண்ணை திருடுகிறான் என்று சொன்னபோது நம்ப மாட்டேன் என்றாயே? கையோடு பிடித்துக் கொண்டு வா, பார்க்கலாம் என்றாயல்லவா? பார் உன் பிள்ளையை வெண்ணை அள்ளிய கையோடு, அதை உண்ட வாயோடு, அப்படியே பிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன்! இப்போதாவது நம்புவாய் அல்லவா?" லலிதையின் அம்மா கையில் பிடித்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினாள். "ஆமாம்.... பார், நாங்களும் உன் பிள்ளையை பிடித்து வந்திருக்கிறோம்", என்று எல்லோரும் அவரவர் பிடித்து வைத்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் நிறுத்தினார்கள்.

      ஒவ்வொருவருக்கும் தன் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் மட்டுமே தெரிந்தான். மற்றவர்கள் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் தெரியவில்லை. யசோதைக்கு இவர்கள் கூட்டி வந்த எந்த கிருஷ்ணனுமே தெரியவில்லை! இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க யசோதைக்குக் கோபம் வந்துவிட்டது.

        "என்னடி, விளையாடுகிறீர்களா? என் பிள்ளை காலையிலிருந்து எங்குமே போகவில்லை! இப்போது கூட உள்ளே ததியோன்னம் (தயிர் சாதம்) சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறான். பார்க்கிறீர்களா?",  என்றவள் உள் பக்கம் திரும்பி "கிருஷ்ணா! கிருஷ்ணா! இங்கே வா!",  என்று உரக்க கூப்பிட்டாள்.

           "என்னம்மா கூப்பிட்டாயா?" என்றபடி ததியோன்னமும் கையுமாக  கிருஷ்ணன் உள்ளிருந்து வந்தானே பார்க்கலாம்! வந்திருந்த அத்தனை கோபியர்களின் வாயும் அடைத்துவிட்டது.

        "என்ன இது? கிருஷ்ணன் உள்ளே இருந்து வருகிறானே!", என்று தன் கையில் இருந்த கிருஷ்ணனை ஐயத்துடன் பார்த்தார்கள். தயிர் வழியும் வாயோடு உள்ளிருந்து வந்த கள்ள கிருஷ்ணன் சிரிக்க, எல்லோருடைய கிருஷ்ணர்களும் வெண்ணை உண்ட வாயோடு இப்போது எல்லோர் கண்களுக்கும் தெரிய....... கோகுலம் ஒரு நொடியில் கோலாகலம் ஆனது.


      தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு, தளர் நடை இட்டு வருவான்; பொன்னேய் நெய்யோடு பாலமுது உண்டு, ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்! மின்னேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய்  வைத்த பிரானே! அன்னே உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே! 

       வத்ஸான் முஞ்ஜன் க்வசித் அஸமயே க்ரோஷ ஸஞ்சாஸ ஹாஸ: என்று இந்த கட்டத்தை ஸ்ரீமத் பாகவதம் பதிவு செய்கிறது.


Pages